சிட்னி: தென்பசிபிக் தீவான டோங்காவில் மீண்டும் வின்ஸ்டன் சூறாவளி ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக, அதற்கான கடைசி நேர தற்காப்பு ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர் உதவிப்பணியாளர்கள். இந்த வாரத் தொடக்கத்தில் தீவின் வடக்குப் பகுதியைத் தாக்கிய வின்ஸ்டன் சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
புயலுக்குப் பின்னால் கன மழை ஏற்படுத்தும் தாக்கங்களும் மோசமாக இருக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர். டோங்காவில் ஸிக்கா கிருமியால் ஐவர் தாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 259 பேர் ஸிக்காவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. கொசுக்களை ஒழிக்கும் நட வடிக்கைகளை உதவிப்பணி யாளர்கள் துரிதகதியில் முடுக்கிவிட்டுள்ளனர்.