யீசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி, பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி/இலக்கியக் கருத்தரங்கை மே 7ஆம் தேதி நடத்த உள்ளது. இவ்வாண்டும் கருத்தரங்கு மெய்நிகர் வாயிலாக நடைபெற உள்ளது.
'மாற்றங்களை ஏற்போம்; நமது சவால்களும் தெரிவு களும்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும்.
மாணவர்களிடையே கற்பனைத் திறன், மொழித் திறன், படைப்பாற்றல் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளித்தல்; தமிழ்மொழியில் தன்னம்பிக் கையுடன் நிகழ்ச்சிகளைப் படைத்தல், கலந்துரையாடு தல், கருத்துத் தெரிவித்தல் ஆகிய திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளித்தல்; மாணவர் களிடையே தலைமைத்துவப் பண்புகள், திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அளித்தல் ஆகியவையே இவ்வாண்டுக்கான கருத்தரங்கத்தின் நோக்கம்.
இன்றைய 21ஆம் நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளாக, அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் யாவை? அவற்றைச் சமாளிக்க இளையர்கள் தயாராக உள்ளனரா? அதேசமயம், மாற்றங்களை ஏற்றுச் சவால்களை எதிர்கொள்ளும் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது? அதற்கான வழிமுறைகள், வாய்ப்புகள் என்னென்ன? இவற்றைப்பற்றி மாணவர் களின் எண்ணங்களை ஆய்வு வழி கண்டறிந்து அவற்றின் தொடர்பில் சிறப்புப் பேச்சாளர்களுடன் கலந்துரையாடலில் மாணவர்கள் ஈடுபட இக்கருத் தரங்கு வழிவகுக்கும்.
இக்கருத்தரங்கில் மனநல மருத்துவர் ஷாலினி, கவிஞர் திரு யுகபாரதி ஆகியோர் சிறப்புப் பேச்சாளர் களாகக் கலந்துகொள்கிறார்கள்.
நாள்: 7/5/2022 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9.30 முதல் மதியம் 12.45 வரை
இடம்: யீசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி அரங்கு (மெய்நிகர் வாயிலாக)
கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கான 'ஸூம்' இணைப்பைப் பெற பின்வரும் இணைப்பின்வழி எதிர்வரும் மே 5ஆம் தேதிக்குள் பதிவு செய்யவும். https://link.ateam.com.sg/tlseminar