நோன்புப் பெருநாளையொட்டி துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 3) அன்று நடந்த கொண்டாட்டங்களில் ஏறத்தாழ 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மனிதவள அமைச்சும் வெளிநாட்டு ஊழியர் அரவணைப்பு கூட்டணி என்ற அமைப்பும் அந்தக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
அதற்கு அரசுசாரா அமைப்புகளும் சமூக, தனியார் அமைப்புகளும் ஆதரவு அளித்தன.
மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் இருவரும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வெளிநாட்டு ஊழியர்களிடம் கலந்துறவாடி மகிழ்ந்தனர்.
விளையாட்டுகள், மேடை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றிலும் கலந்துகொண்டு கண்டு, களித்து, விளையாடி ஊழியர்கள் மகிழ்ந்தனர்.