மலேசியாவின் சாபா மாநிலத்தில் ஆற்றைக் கடந்துகொண்டிருந்த ஆடவர் ஒருவர் முதலையால் கொல்லப்பட்டார்.
சாபாவின் கினபட்டாங்கான் வட்டாரத்தில் அந்த சம்பவம் நடந்தது.
நீர்மட்டம் உயர்ந்திருந்த ஆற்றில் இருந்த மரப்பாலத்தில் ஆடவர் நடந்துகொண்டிருந்தார்.
அப்போது முதலை ஆடவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.
அழைப்பு கிடைத்ததும் ஐந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தீயணைப்புத் துறை கூறியது.
மற்ற துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆடவரைத் தேடி மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஆடவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன