எம்ஆர்டி ரயிலில் மின்தேக்கி (பவர் பேங்க்) தீப்பிடித்துக் கொண்டதை அடுத்து, முன்னெச்செரிக்கையாக பயணிகள் சொமர்செட் எம்ஆர்டி நிலையத்தில் இறங்க வேண்டியிருந்தது.
அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
வடக்கு தெற்கு ரயில் பாதையில் வடக்கு நோக்கிச் சென்ற ரயிலில் ஒருவரது மின்தேக்கி தீப்பிடித்துக் கொண்டது.
இன்னொரு பயணி, தீயை அணைக்க வேகமாக உதவினார் என்று எஸ்எம்ஆர்டி கூறியது.
பயணிகள் யாருக்கும் மருத்துவ உதவித் தேவைப்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை என்று அது கூறியது.
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்று, புகை நிறைந்த ரயிலிலிருந்து பயணிகள் வெளியேறியதைக் காட்டியது.