ஈசூன் குடியிருப்புப் பேட்டையில் நாம் நடந்துசென்றால், அங்குள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் வெற்றுத்தளங்களில் பச்சை, சிவப்பு, நீல நிற இருக்கைகளைக் காணலாம்.
அந்த இருக்கைகளை எங்கேயோ பார்த்ததுபோன்ற நினைவு நமக்கு வரும். ஆம், பழைய பெருவிரைவு ரயில்களிலிருந்து (எம்ஆர்டி) அப்புறப்படுத்தப்பட்ட 20 இருக்கைகள், அக்கம்பக்க குடியிருப்புப் பேட்டையில் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் அவற்றில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம்.
நீ சூன் நகர மன்றத்திற்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் இடையிலான பங்காளித்துவ முயற்சியில் இந்த ஏற்பாடு சாத்தியமாகிறது.
சிங்கப்பூர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக எம்ஆர்டி ரயில்களை சிலர் கருதுகின்றனர். 1987ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் ரயில்கள் சேவையைத் தொடங்கின.