கரையோரப் பூந்தோட்டங்களின் 'ஃபிளவர் டோம்' கூடத்துக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை செல்வோர், சிறப்புத் தேவையுடைய கலைஞர்களின் கலைப் படைப்புகளை அங்கு காணலாம். நெதர்லாந்து, கரையோரப் பூந்தோட்டங்களின் காட்சிகளால் உத்வேகம் அடைந்த 27 கலைஞர்களின் 50 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கரையோரப் பூந்தோட்டங்கள், உள்ளூர் அமைப்பான 'டச்' சமூகச் சேவைகள், சிங்கப்பூரில் உள்ள நெதர்லாந்துத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படம்: சாவ்பாவ்