பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு சிங்கப்பூரின் 57வது பிறந்த நாளை சுமார் 57,000 பாலர் பள்ளி மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். நேற்று நடைபெற்ற 'கெட்ஏக்டிவ்! சிங்கப்பூர் நாச்சர் கிட்ஸ் ஃபெஸ்டிவல்' எனும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்கேற்றனர்.
உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் ஷுவெலிங் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். பாலர் பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த விளையாட்டுகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றன.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000க்கும் அதிகமான பிள்ளைகளும் ஆசிரியர்களும் நேரில் சென்று கலந்துகொண்டனர். 500 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மேலும் 56,000க்கும் அதிகமான சிறுவர்கள் நிகழ்ச்சியில் மெய்நிகரில் கலந்துகொண்டனர்.
'ஈகல் கேட்சஸ் தி சிக்ஸ்', 'ஹொப்ஸ்கோட்ச்' உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.