கோவை: இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் கனிஷ் என்ற மாணவன், வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.
மொத்தம் 27,394 அரிசிகளைப் பயன்படுத்தி, இந்திய வரை படத்தை இவர் ஓவியமாக வடித்துள்ளார்.
கோவை, புது சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன்- சிஜி தம்பதியர். இவர்களது மகன் கனிஷ்.
சிறுவன் கனிஷ் கூறுகையில், "குழந்தைப் பருவம் முதலே ஓவியத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுமையான முறையில் ஓவியம் படைக்க விரும்பினேன். மக்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பது நன்கு தெரியும். ஆனால், இந்தச் சுதந்திர தினத்தோடு சேர்த்து எத்தனை நாள்கள் ஆகின்றன என்பது தெரியாது. அந்த மொத்த நாள்களைக் குறிப் பிடும் வகையில் 27,394 அரிசி களைப் பயன்படுத்தி, மூவர்ணங் களைச் சேர்த்து, இந்திய வரைபடத்தை உருவாக்கியுள்ளேன்," என்றார்.