இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, முதல் நாள் 11ஆம் தேதி இரவு 11 மணியிலிருந்து 12ஆம் தேதி மாலை 6 மணிவரை பேருந்து சேவை 61 சில பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் என்று எஸ்எம்ஆர்டி அறிவித்துள்ளது.
நீல் ரோட்டில் மேக்ஸ்வெல் நிலைய வெளிவழி 3க்கு எதிரில், ‘தி பின்னகில் அட் டக்ஸ்டனுக்கு’ முன்னால், சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு எதிரில் ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்களில் அப்பேருந்து அக்குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நிற்காமல் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்விவரம் அறிய காலை 7.30 மணிமுதல் இரவு 8 மணிவரை 1800-336-8900 என்ற நேரடி அழைப்பு எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.smrt.com.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.