தனிமைப்படுத்தப்பட்டோர் ஹோட்டல் அறையில் இருந்தவாறே வாக்களிக்கலாம்

இல்லத் தனிமை கட்டாய உத்தரவை ஹோட்டல்களில் நிறைவேற்றும் சிங்கப்பூரர்கள் தங்களது அறையைவிட்டு வெளியேறாமலேயே வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வாக்களிப்புக்கான நடமாடும் குழுக்கள் அவர்களைச் சந்தித்து வாக்குச் சீட்டை வழங்கும்.

ஹோட்டல் அறையின் கதவைத் திறந்ததும் கதவிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி வாக்காளர் நிற்கவேண்டும்.

அவர்கள் தங்களது முகத்திரையை கீழே இறக்குவதோடு அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டை அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

தேர்தல் தொகுதி, வாக்களிப்பு வட்டாரம், வாக்காளரின் வரிசை எண் ஆகியன வாசிக்கப்பட்டதும் அவர் ரகசியமாக வாக்குச்சீட்டில் குறியிடலாம்.

பின்னர் அதிகாரிகள் வைத்திருக்கும் வாக்குப்பெட்டியில் அவர் அதனை செலுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் இருந்தால் இந்த நடைமுறை மீண்டும் தொடங்கும்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!