இல்லத் தனிமை கட்டாய உத்தரவை ஹோட்டல்களில் நிறைவேற்றும் சிங்கப்பூரர்கள் தங்களது அறையைவிட்டு வெளியேறாமலேயே வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வாக்களிப்புக்கான நடமாடும் குழுக்கள் அவர்களைச் சந்தித்து வாக்குச் சீட்டை வழங்கும்.
ஹோட்டல் அறையின் கதவைத் திறந்ததும் கதவிலிருந்து ஒரு மீட்டர் தள்ளி வாக்காளர் நிற்கவேண்டும்.
அவர்கள் தங்களது முகத்திரையை கீழே இறக்குவதோடு அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்டை அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
தேர்தல் தொகுதி, வாக்களிப்பு வட்டாரம், வாக்காளரின் வரிசை எண் ஆகியன வாசிக்கப்பட்டதும் அவர் ரகசியமாக வாக்குச்சீட்டில் குறியிடலாம்.
பின்னர் அதிகாரிகள் வைத்திருக்கும் வாக்குப்பெட்டியில் அவர் அதனை செலுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் இருந்தால் இந்த நடைமுறை மீண்டும் தொடங்கும்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online