தெற்காசிய பயணிகள் கூட்டம் ஒன்று, புதன்கிழமையன்று 60க்கும் மேற்பட்ட பயணிகள் சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் பிற்பகல் 2.53 மணிக்குத் தரையிறங்கியதாக காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சர்ச்சையை கிளப்பியது.
இக்காணொளியை பதிவேற்றம் செய்த ‘Singapore Incidents’ என்ற ஃபேஸ்புக் பக்கத்துக்கு எதிராக போக்குவரத்து அமைச்சு பொஃப்மா (POFMA) எனும் பொய்ச் செய்திக்கு எதிரான சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளது.
தான் பதிவேற்றம் செய்த பதிவில் திருத்தச் செய்தியைப் போடுமாறு தான் அந்த ஃபேஸ்புக் பக்கத்துக்கு உத்தர விட்டுள்ளதாக அமைச்சு இன்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் அந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு தொடர்பு தகவல் அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.