தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை குறித்து மறுஆய்வு செய்யும் அரசியல் சாசன குழுவின் பொது கருத்துக்கேட்பு அங்கத்தில் பங்கேற்கவுள்ள 19 குழுக்கள், தனிப் பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.தனபாலனும் ஒருவர். வாய்மொழியாக வாதங்களை முன்வைக்க விடுக்கப்பட்ட அழைப்பை பாட்டாளிக் கட்சி நிராகரித்துள்ளது. குழுவின் முன்னால் வாய்மொழியாக வாதங்களை முன் வைப்பதற்கு பதிலாக இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே விரும்புவதாக பாட்டாளிக் கட்சி கூறியது.
மேலும் எழுத்துபூர்வமாக தனது வாதங்களைக் குழுவுக்கு அனுப்புவதாகவும் அது குறிப் பிட்டது. இந்த மாதமும் அடுத்த மாதமும் நடைபெறவுள்ள நான்கு பொது கருத்துக்கேட்பு நிகழ்வில், தேர்ந் தெடுக்கப்பட்ட அதிபர் முறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தங்களது கருத்துகளை 19 குழுக்களும் தனி நபர்களுக்கும் முன் வைப்பர். யூரேஷிய சங்கம், 'அவேர்' எனப்படும் மகளிர் செயல், ஆய்வுச் சங்கம் போன்ற வை இதில் இடம்பெற்றுள்ளன.