சிங்கப்பூர் ஊழியர் அணி மேம் பாட்டு வாரியம், புதிதாக எட்டு நிபுணத்துவப் பயிற்சி செயல்திட் டங்களைத் தொடங்கும். மறுதேர்ச்சி பெற, மேம்பட, வேலை மாறிக்கொள்ள, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறை யில் வேலைக்கு மாறிக்கொள்ள விரும்பும் பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் புதிய செயல்திட்டங்கள் மூலம் பலன்பெறலாம். மூன்று முதல் ஒன்பது மாதங் கள் வரை நீடிக்கும் இத்திட்டங் கள், இணையப் பாதுகாப்பு, மென் பொருள் உருவாக்கம் போன்ற வற்றை உள்ளடக்கும். இப்புதிய திட்டங்களையும் சேர்த்தால் மொத்தம் 10 பயிற்சித் திட்டங்கள் நடப்பில் இருக்கும்.
இவை இந்த ஆண்டில் வேலை தேடுகின்ற, வேலை மாறுகின்ற இத்தகைய 250 ஊழியர்களுக்குப் போதுமானவையாக இருக்கும் என்று வாரியம் குறிப்பிட்டது. இத்தகைய ஊழியர்கள் தாங்கள் பெறும் பயிற்சிக்குத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஊழியர்களின் சம்பளத் தில் 70% வரை, மாத வரம்பாக $2,000 வரை முதலாளிகளுக்கு மானியம் உண்டு. நீண்டகால மாக வேலையில்லாமல் உள்ள, 40க்கும் அதிக வயதுள்ள இத்த கைய ஊழியரைச் சேர்க்கும் முத லாளிக்கு 90% மானியமுண்டு.