போலிசில் பொய் புகார் செய்த ஆடவரிடம் விசாரணை

தன்னிடம் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று போலிசிடம் பொய் புகார் செய்த 33 வயது ஆடவரை போலிஸ் விசாரித்து வருகிறது. அங் மோ கியோ தொழிற்பேட்டை 2ல், இன்னாரென்று தெரியாத இரண்டு பேர் தன்னைத் தாக்கியதாகவும் $400 இருந்த தனது பணப்பையைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் அந்த ஆடவர் திங்கட்கிழமை இரவு 11.47 மணிக்கு சிராங்கூன் அக்கம்பக்க போலிஸ் மையத்தில் புகார் செய்தார். போலிஸ் அவரை விசாரித்தது. முன்னுக்குப் பின் முரணான பொய்த் தகவல்களை அவர் தெரிவித்தார். அவரிடம் யாரும் கொள்ளையடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த விவரங்களை நேற்று போலிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

போலிஸ் வளத்தையும் நேரத்தையும் இப்படி தவறான முறையில் வீணாக்குவதால் உண்மையான குற்றச்செயல் களையும் அவசர நிலைகளையும் சிறந்த முறையில் போலிஸ் கையாளுவதில் சங்கடம் ஏற்பட்டுவிடும் என்பதை பொதுமக்களுக்கு போலிஸ் நினைவூட்டியது. போலிசிடம் பொய் புகார் தெரிவிப்போர், தவறான தகவல்களைத் தெரிவிப்போர் சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று போலிஸ் எச்சரித்தது. அரசாங்க ஊழியரிடம் பொய்யான தகவல்களைத் தெரிவித்து யாரேனும் குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஓராண்டு வரை சிறை அல்லது $5,000 வரைப்பட்ட அபராதம் விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!