ஹவ்காங் வட்டாரத்தில் பொக்கிமோன் மோகம் அதிகரித்து வருவதால் மக்கள் பலரும் தங்கள் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று போலிஸ் நினைவூட்டியுள்ளது. ஹவ்காங் அக்கம்பக்கப் போலிஸ் மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'அக்கம்பக்கம் 4' 'பொங்கோல் பார்க்' ஆகிய இடங்களில் குறிப்பிட்ட ஒரு சில குழுவினர் கூடுவதைக் கவனித்து வருவதாகச் சொன்னது.
பொக்கிமோனைத் துரத்தும் பொருட்டு அவர்கள் சாலைகளைக் கடக்கும்போது சாலைப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாமல் கடப்பது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கும்படியும் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும் அப்பகுதியில் இரவு வேளையில் பொக்கிமோன் விளையாட்டில் ஈடுபடுவோர் ஒலி இரைச்சலைக் குறைத்துக் கொள்ளுமாறும் குடியிருப்பா ளர்கள் வசதிக்காக வட்டாரத் தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் போலிஸ் அறிவுறுத்தியது.
ஹவ்காங் வட்டாரக் குடியிருப்பாளர்கள் கடந்த புதன்கிழமைஇரவு தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சாலைகளைக்கடந்து 'பொக்கிமோன் கோ' விளையாடினார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ்