தீ சம்பவம் நிகழ்ந்த சுங்கை காடுட்டில் அமைந்துள்ள மூன்று மாடி சரக்குக் கிடங்கை மூடுமாறு கட்டட கட்டுமான ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை அக்கட்டடத்தில் பெரும் தீ மூண்டது. தீயில் எவருக்கும் பாதிப்பில்லை. கட்டடத்தின் ஒரு மாடி பகுதியின் உலோக கூரை நெருப்பினால் இடிந்துள்ளது சோதனையின் போது தெரியவந்தது என்று ஆணையம் கூறியது. கட்டடத்தின் மூன்று மாடி பகுதி உறுதியான நிலையில் உள் ளது என்றும் பக்கத்து கட்டடங் களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
"பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, பாதிக்கப்பட்ட கட்ட டத்தை மூடுமாறு கட்டட உரிமையாளரைக் கேட்டுக்கொண்டோம். நிபுணத்துவ பொறியாளாரை நியமித்து விரிவான சோதனைகளை மேற்கொண்டு நிரந்தரமான சீர்திருத்தப் பணிகளுக்கு பரிந்துரை களைப் பெறுமாறும் கூறியுள்ளோம்," என்று ஆணையம் தெரிவித்தது. நிபுணத்துவ பொறியாளரின் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சீரமைப்புப் பணிகள் செய்யப்படு வரை பாதிக்கப்பட்ட கட்டடம் மூடப்பட்டிருக்கும்," என்று ஆணையம் கூறியது.