சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பில் புதிதாக இடம்பெறவிருக்கும் தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடத்தை நிர்வகித்து நடத்தும் நிறுவனம், அரசாங்கத்தின் பேருந்து ஒப்பந்த மாதிரியைப்போல ரயில் சேவையை முதன்முதலாக ஏற்று நடத்தும் நிறுவனமாக இருக்கும். அதாவது அந்த வழித்தடத்தை ஏற்று நடத்தும் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள் ளும். வருவாயை அரசாங்கம் வசூலிக்கும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனை அறிவித்தது. தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி வழித்தடம்தான் இப்போது வரையில் மிகவும் சிக்கலான ரயில் திட்டமாக இருக்கிறது. புதிய ரயில் நிர்வாக ஏற்பாட்டின் கீழ் ஏலக் குத்தகையைக் கொடுப்பதால் அரசாங்கத்திற்கு அனுகூலமற்ற சூழல் ஏற்படக்கூடும் என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது.