இதர வர்த்தக வாய்ப்புகள் குறித்து குழுமம் கவனித்து வந்தாலும் ஊடகத் துறையின் மூல வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) மேம்படுத்திக் கொண்டிருக்கும் என்று அதன் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் தெரிவித்துள்ளார். நேற்று எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத் தில் டாக்டர் லீ பேசினார்.
"சவால்கள் நிறைந்த சூழல், மாறி வரும் ஊடக வாடிக் கையாளர் தேவைகள் ஆகியவை இருந்தாலும் நாளிதழ் துறையின் மூல வர்த்தகத்தைத் தொடர்ந்து முன்னணியில் வைத்திருப்பதே குழுமத்தின் இலக்கு. ஊடகத் துறையினருட னும் ஊடகம் அல்லாத துறையினருடனும் எஸ்பிஎச் கொண்டிருக்கும் நட்புறவு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்," என்றும் அவர் சொன்னார். எஸ்பிஎச் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 400க்கு மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டார்கள்.