வாகன விபத்தில் ஈடுபட்டதை அடுத்து போலிஸ் அதிகாரி யிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பறிக்க முயன்ற முன்னாள் சொத்து முகவரான 38 வயது ஹான் ஜிங்குக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனையும் பிரம்படிக்குப் பதிலாக 12 வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று தாம்சன் வட்டாரத்திலுள்ள சூ சோவ் டிரைவ், சூ சோவ் கார்டன் ரோடு சந்திப்பில் அந்த மாது இந்தக் குற்றத்தைப் புரிந்தார். விபத்து நிகழ்ந்த சூ சோவ் கார்டன் ரோட்டிற்கு இரு போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் வந்தபோது ஓட்டுநர் ஹான் அங்கு காணவில்லை. அதிகாரிகள் பிறகு அவரை பேருந்து நிறுத்தத்தில் கண்டபோது விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரச் சொன்ன போது முதலில் ஒத்துழைத்த ஹான், பின்னர் மறுபடியும் அங்கிருந்து சென்றுவிட்டார். அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தி அவரைத் திரும்பி வரச் சொன்னபோது திடீரென ஹான் அதிகாரியிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். இதனையடுத்து ஹான் கைது செய்யப்பட்டார்.
போலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்றவருக்குச் சிறை
18 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!