சைனா டவுன் பாயிண்ட்டில் நேற்று பிற்பகலில் மூன்றாவது மாடியில் தீ மூண்டது. அது பற்றி தங்களுக்கு பிற்பகல் சுமார் 3 மணிக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது. மின்தடைக்கு மூன்றாவது மாடியில் மின்படி மோட்டாரில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறே காரணம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்தப் படை தண் ணீரை அடித்து தீயை அணைத்தது. அந்தப் படை அங்கு சென்று சேர்வதற்கு முன்பாக கடைக்காரர் ஒருவர் தீயை அணைத்துக்கொண் டிருந்தார்.
சைனா டவுன் பாயிண்ட்டில் மூன்றாவது மாடி மின்படியில் உள்ள மின்சார மோட்டாரிலிருந்து தீ மூண்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்