புக்கிட் பாத்தோக்கில் சுகாதார அமைச்சு குழுமத்தின் கட்டுமானத் தளம் ஒன்றில் நேற்று இரு கட்டுமான ஊழியர்கள் கீழே விழுந்ததைத் தொடர்ந்து அங்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஊழியர் உயரத்தி லிருந்து ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சு, மூன்று ஊழிய ர்கள் காயமடைந்ததை உறுதிப் படுத்தியது. அந்தக் கட்டுமானத் தளத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து சாரக் கட்டு ஒன்று கீழே விழுந்ததில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
கட்டுமானத் தளத்தின் ஒன்பதாவது மாடியிலிருந்து ஒரு சாரக்கட்டு விழுந்ததில் மூவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. படம்: சாவ் பாவ்