சீக்கியம் நிறுவப்பட்டு 550 ஆண்டுகள்: சிங்கப்பூரில் ஓராண்டுக் கொண்டாட்டம்

சீக்கியம் நிறுவப்பட்டு 550 ஆண்டுகள்: சிங்கப்பூரில் ஓராண்டுக் கொண்டாட்டம்

1 mins read

சீக்கிய சமயம் நிறுவப்பட்டு 550 ஆண்டுகள் ஆகியவிட்டன. இதைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூரில் ஓராண்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீக்கியர்களுக்கும் பிற சமயங்களைச் சேர்ந்தோருக்கும் பற்பல நடவடிக்கைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொண்டாடத்தை டவுனர் சாலையில் அமைந்துள்ள மத்திய சீக்கிய கோயிலில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மக்கட்தொகை அடிப்படையில் சிங்கப்பூரில் சீக்கிய சமூகம் சிறிதாக இருந்தாலும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அது பெரிதளவில் பங்காற்றியுள்ளதாக அமைச்சர் ஈஸ்வரன் புகழாரம் சூட்டினார். கல்வி, சட்டம் போன்ற துறைகளில் சீக்கியர்கள் பலர் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.