$5.4 மி. தங்க மூதலீடு மோசடி: வியட்னாமியர் மீது குற்றச்சாட்டு

தங்கத்தில் முதலீடு செய்து அதிக பணம் பெறலாம் என்று பொய் சொல்லி குறைந்தது ஐந்து பேரிடமிருந்து $5.4 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை சுருட்டிய வியட்னாமிய பெண் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது.

நுயன் தி துலான் எனும் அந்தப் பெண், தாம் 12 கிலோ கிராம் தங்கக் கட்டிகளை விற்கப்போவதா கச் சொல்லி ஆடவர் ஒருவரிடமி ருந்து $666,048ஐ ஏமாற்றினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லான் என்ற பெண் தான், தங்க இடைத்தரகு நிறுவ னத்தை நடத்துவதாகச் சொல்லி தங்களை அணுகியதாக பலர் போலிசில் புகார் கொடுத்தனர்.

தனது நிறுவனம் தங்கத்தை சலுகை விலையில் விற்பதாக அப் பெண் பொய் கூறினார்.

அதை நம்பிய சிலர் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு $261,000 முதல் $3.54 மில்லியன் பணத்தைத் தங்கம் வாங்குவதற் காக மாற்றி விட்டனர்.

ஆனால், லான் அவர்களின் பணத்தைப் பெற்றுக்கொண்டும் தங்கத்தைக் கொடுக்கவில்லை.

தீவிர விசாரணைக்குப் பிறகு அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் லானை அடையாளம் கண்டு அவரைக் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

லான், இம்மாதம் 31ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!