நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நாள்­தோ­றும் புதுப் புது கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஏற்­கெ­னவே உள்ள கட்­டுப்­பாடு­களும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வலுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில் நேற்று புதிய கட்­டுப்­பாடு ஒன்று அறி­விக்­கப்­பட்­டது.

வீட்­டிலேயே தங்கியிருக்கும் உத்­த­ரவு உள்­ளிட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­வர்­கள் இனி மருத்­துவ சிகிச்­சைக்­காக வெளியே சென்­றால் கட்­டா­யம் முகக்­க­வ­சத்தை அணிய வேண்­டும்.

கொரோனா கிருமி தொற்­றி­யி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் சிகிச்­சைக்கு வெளியே சென்­றாலோ அல்­லது அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்கு வெளியே சென்­றாலோ முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்று நேற்று சுகா­தார அமைச்சு கூறியது.

தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் இந்­தக் கட்­டுப்­பாட்டை அமைச்சு அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.

வீட்­டிலேயே தங்கியிருக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் தீவிர சுவா­சச் கோளாறு கார­ண­மாக மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு பெற்­ற­வர்­களும் சிகிச்­சைக்­காக வெளியே செல்­லும்­போது முகக் கவ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது கிரு­மி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் நேரடி தொடர்­பில் இருந்­த­வர்­கள் அல்­லது கிரு­மி தொற்­றி­யி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் மருத்­து­வ­ம­னை­யிலோ அல்­லது வேறொரு இடத்­திலோ தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களும் புதிய கட்­டுப்­பாட்­டின் கீழ் வரு­கின்­ற­ னர்.

அது மட்­டு­மல்­லா­மல் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் தங்களுக்கு விதிக்­கப்­பட்­டவர்கள் அது குறித்து தங்களின் முத­லா­ளி­க­ள் அல்­லது பள்­ளிக்­கு தெரி­விக்க வேண்­டும்.

உணவு விநி­யோ­கிப்­பா­ளர்­கள் அல்­லது அத்­தி­யா­வ­சியப் பொருள் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் தவிர தங்­கி­யி­ருக்­கும் இடத்­தில் மற்­ற­வர்­க­ளு­டன் நேரடி தொடர்பு கொள்­வ­தை­யும் அவர்­கள் தவிர்க்க வேண்­டும். இந்த விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­த­வர்­க­ளுக்கு 10,000 வெள்ளி வரை அப­ராா­தம் அல்­லது ஆறு மாதச் சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கடந்த வாரம் தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் மற்­றோர் உத்­த­ரவை சுகா­தார அமைச்சு பிறப்­பித்­தி­ருந்­தது. தீவிர சுவா­சக் கோளாறு கார­ண­மாக மருத்­து­வ­ரால் ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்­சைக்­குத் தவிர வேறு எதற்­கும் வீட்­டி­லி­ருந்து வெளியே­ செல்லக்கூடாது என்று அது உத்­த­ரவு பிறப்­பித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!