கொவிட்-19 கிருமித் தொற்றால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து முஸ்தஃபா சென்டர் கடைத்தொகுதி இம்மாதத் தொடக்கத்தில் 14 நாட்களுக்கு மூடப்பட்டது.
அதனையடுத்து நேற்று முன்தினம் (ஏப்ரல்16) அந்தக் கடையின் பேரங்காடிப் பிரிவும் மருந்தகப் பிரிவும் திறக்கப்படவிருந்தன.
ஆனால் மேலும் இரு வாரங்களுக்குக் கடை மூடியிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிக்கை பிறப்பித்ததைத் தொடர்ந்து கடை இன்னும் திறக்கப்படவில்லை என்று முஸ்தஃபா சென்டரின் மனிதவளப் பிரிவின் மேலாளர் முஹம்மது கவுஸ் தெரிவித்தார்.
தற்போதைய அறிவிப்பின்படி இம்மாதம் 29ஆம் தேதி வரையில் கடை மூடப்பட்டிருக்கும் என்று திரு கவுஸ் தெரிவித்தார்.
“தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அறிவுரைபடி கடையின் அனைத்துப் பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார் திரு கவுஸ்.
கடையின் செயல்பாட்டுக்கு வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அவர்.
முஸ்தஃபா கடந்த 2ஆம் தேதி கிருமித்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பலருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 87 பேர் அந்த குழு மத்துடன் தொடர்புள்ளவர்களாக இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தின் ஊழியர்கள். மற்றவர்கள் அவர்களின் குடும்பத்தார் என்று திரு கவுஸ் தெரிவித்தார்.