புதிதாக திறக்கப்பட்டுள்ள சாங்கி ஜுராசிக் மைல்லில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு சிங்கப்பூரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவையும் இணைக்கும் அந்த 3.5 கிலோமிட்டர் நீளமுள்ள சாங்கி ஜுராசிக் மைல் திறக்கப்பட்ட ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த குட்டி டைனசோர் சிற்பம் மீது பெண் ஒருவர் உட்கார்ந்து முன்னுக்கும் பின்னுக்கும் சாய்வதைக் காட்டும் காணொளி, சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. குட்டி டைனசோர் சிற்பத்தின் ஐந்து பற்களைக் காணவில்லை. குட்டி டைனசோர் சிற்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அது தற்காலிகமாக அங்கிருந்து அப்
புறப்படுத்தப்படும் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பார்த்து ரசிக்க டைனடோர் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் கூறினார். அவை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்,
“சிற்பங்கள் மீது ஏறி உட்காரக் கூடாது என சாங்கி ஜுராசிக் மைல் எங்கும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க பாதை நெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று குழுமத்தின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குட்டி டைனசோர் சிற்பம் சேதம் அடைந்திருப்பதைப் பார்த்து அங்கு வந்திருந்தவர்கள் கவலை தெரிவித்தனர். இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க தவறு செய்வோருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர். கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையின்போது சாங்கி ஜுராசிக் மைல்லில் மக்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் அங்கு திரள்வதால் பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்படு
கிறதா என்பது குறித்து கவலை எழுந்துள்ளது. எனவே, நேற்றி லிருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சாங்கி ஜுராசிக் மைல்லுக்குச் செல்ல விரும்புவோர் சாங்கி பிளேபாசில் முன்பதிவு செய்ய வேண்டும்.