மோசடிக் குற்றங்களை முறியடிக்க உதவிய 100க்கும் மேற்பட்டோருக்கு வர்த்தக விவகாரத் துறை விருதுகளை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு 83 மோசடிக் குற்றங்களை இவர்கள் முறியடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 114 பேருக்கு சமூகப் பங்காளித்துவ விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இவர்களின்
பங்களிப்பின் காரணமாக மோசடிக்காரர்களால் களவாடப்பட இருந்த $3.2 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான மோசடி வழக்கு கள் இணையம் வழி நடத்தப்பட்ட காதல் மோசடிகள் என்று வர்த்தக விவகாரத் துறை கூறியது.
விருது பெற்றவர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக இந்த மோசடிக் குற்றங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வங்கிகள், பணம் அனுப்பும் முகவைகள் உட்பட 17 அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மோசடிக் குற்றங்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றைத் தடுக்கவும் இந்த அமைப்புகள் கடப்பாடு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விருது பெற்ற அமைப்புகளில் டிபிஎஸ் வங்கி, யுஓபி வங்கி, ஹாக்கோ தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டில் மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை 65 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்ததை நேற்று காலை நடைபெற்ற மெய்நிகர் நிகழ்ச்சியின்போது வர்த்தக விவகாரத் துறையின் இயக்குநர் டேவிட் சியூ சுட்டினார்.
2019ஆம் ஆண்டில் மோசடிக்காரர்கள் $170 மில்லியன் கள
வாடியதாகவும் இந்தத் தொகை கடந்த ஆண்டு $268 மில்லியனாக அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். மோசடிக் குற்றங்களை முறியடிக்க அண்மையில் பல திட்டங்கள் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அமைச்சுகளுக்கிடையிலான மோசடி முறியடிப்புக் குழுவும்
ஒன்று.