வழிபாட்டுத் தலங்களில் ஆகஸ்ட் 10 முதல் கட்டுப்பாட்டுத் தளர்வுகள்

வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளில் அதிகபட்சம் 500 பேர் கலந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொவிட்-19 கட்டுப்பாட்டுத் தளர்வுகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் நடப்புக்குக் கொண்டு வரப்படுகிறது.

தற்போது 50லிருந்து 100 பேர் கலந்துகொள்ளும் சமய நிகழ்வுகளுக்குச் செல்வோர் அதற்கு முன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் இன்னும் போடாதவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

தற்போதைய நடைமுறையின்படி வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை அனுமதிக்கப்படலாம்.

புதிய மாற்றத்தின்கீழ் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 500 பேர் கூடலாம். ஆனால் சமயப் பணியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு இன்று (ஆகஸ்ட் 7) கூறியது.

இரண்டாவது தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்களான பிறகே முழுமையாகத் தடுப்பூசி போட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது வழிபாட்டுத் தலத்தில் நடைபெறும் சமய நிகழ்வு முடிவதற்கு முன்பு கடந்த 24 மணி நேரத்துக்குள் கொவிட்-19 பரிசோதனை செய்து கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!