நாளை மறுதினம் முதல் மருத்துவமனைகளில் உள்நோயாளிப் பிரிவுகளுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் போட்டுக்கொள்ளாதோருக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்ளும் உள்நோயாளிப் பிரிவுக்குள் நுழைய கொவிட்-19 சோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை. கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களிடம் சோதனை மேற்கொள்ளத் தேவையில்லை என்பதைக் குறிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் இருக்கவேண்டும்.
அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொவிட்-19 சோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும். சோதனையில் அவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியிருக்கவேண்டும்.
இத்தகையோருக்கு நாளை மறுதினம் முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை இந்த நிபந்தனை கிடையாது.
எனினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர், நாளை மறுதினம் முதல் தங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை சோதனை மூலம் உறுதிசெய்த பின்னரே உள்நோயாளிப் பிரிவுகளுக்குள் அனுமதிக்கப்படுவர்.
அதற்கு முன்பு 24 மணிநேரத்திற்குள் அவர்கள் 'ஏஆர்டி' அல்லது 'பிசிஆர்' சோதனைகளை மேற்கொண்டிருக்கவேண்டும்.
எல்லா விருந்தாளிகளும் உள்நோயாளிப் பிரிவுகளில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள்தான் இருக்கலாம்.
உடல்நலம் மிகவும் மோசமாக உள்ள நோயாளிகளைப் பார்க்க ஐவர் ேபாகலாம்.
மற்ற நோயாளிகளைப் பார்க்க இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.