நண்பர்களாகப் பாசாங்கு செய்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்கும் மோசடிக்காரர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு போலிசார் அறிவுறுத்துகின்றனர்.
தெரியாத எண்கள் மூலம் தொடர்புகொண்டு. "நான் யார் என்று தெரிகிறதா? என்னை ஞாபகம் இல்லையா?" என்று மோசடிக்காரர்கள் கேட்டு மக்களைக் குழுப்புவதாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.
ஊகிக்கும் முயற்சியில் தங்கள் நண்பர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லும்போது மோசடிக்காரர்கள் அதில் ஒரு பெயரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தமது கைபேசி காணாமல் போய்விட்டது அல்லது கைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக மோசடியில் ஈடுபடுபவர்கள் பொய் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
நம்பியவர்களைப் பிறகு இன்னொரு முறை தொடர்புகொண்டு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அவர்களிடம் மோசடிக்
காரர்கள் கடன் கேட்டதாக போலிசார் கூறினர்.
குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்வர். அறிமுகம் இல்லாதவர்களிடமோ அல்லது நேரில் சந்திக்காதவர்களிடமோ பணம் அனுப்ப வேண்டாம் என்று
போலிசார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மோசடிகள் குறித்து தகவல் அறிந்தோர் 1800-255-0000 எனும் எண் மூலம் போலிசாருடன் தொடர்புகொள்ளலாம்.