போலிஸ் ஆறு பேரை கைது செய்துள்ளது. 17 முதல் 21 வரை வயதுள்ள அவர்கள் இம்மாதம் 17ஆம் தேதி இரவு சுமார் 10.20 மணிக்கு கிளமெண்டி அவென்யூவில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக சந்தேதிக்கப்படுவதாக போலிஸ் தெரிவித்தது.
அந்த இடத்தில் இரு குழுவினருக்கு இடையே ஏதோ சச்சரவு காரணமாக கைகலப்பு மூண்டதாக முதல் கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது. அங்கு நான்கு ஆடவர்கள் கைதானார்கள்.
அதே நாளன்று இதர இருவர் பிடிபட்டனர்.
15 முதல் 43 வரை வயதுள்ள இதர இரண்டு ஆடவர்களும் ஐந்து பெண்களும் விசாரணையில் உதவி வருகிறார்கள்.
ஒரு கத்தி கைப்பற்றப்பட்டது. 17 வயதுள்ள ஓர் ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்படவிருந்தது. எஞ்சிய 12 பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். புலன் விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் தெரிவித்தது.