சிங்கப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி போட்டவர்களுக்கான வழித்தடத்தை பயன்படுத்த ஏறக்குறைய 750 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஜெர்மனியைச் சேர்ந்த 735 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 301 பேர் குறுகிய கால பயண அனுமதியின் கீழ் வருகின்றனர். 434 பேர் நீண்டகால அட்டையை வைத்திருப்பவர்கள் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.
இேதபோல புருணையைச் சேர்ந்த இருபது பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 18 பேர் குறுகிய காலப் பயணிகள் ஆவர். இருவர், நீண்டகாலம் தங்குவதற்கான அட்டையை வைத்துள்ளவர்கள்.
அடுத்த புதன்கிழமையில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி வரை சிங்கப்பூர் வருவதற்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஜெர்மனியிலிருந்து முதல் தடுப்பூசி வழித்தடத்திற்கான விமானம் அடுத்த புதன்கிழமை சிங்கப்பூர் வருகிறது.
இதேபோன்று புருணையிலிருந்து முதல் விமானம் அடுத்த வியாழக்கிழமை சிங்கப்பூர் வருகிறது.
புதிய தடுப்பூசி வழித்தடம், ஜெர்மனி மற்றும் புருணையில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் உட்பட முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கிறது. அவர்கள் தனிமைப்படுத்த மாட்டார்கள்.