சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 13,158 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று நோய்வாய்ப்பட்ட 16,274 பேரைவிட இது குறைவு
நேற்று முன்தினம் 1,437 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 47 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
190 பேருக்கு உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டது.
கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் ஐவர்
மாண்டனர்.