சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,381 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை திங்கட்கிழமை 2,271 ஆக இருந்தது.
சென்ற செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம். அன்று எண்ணிக்கை 1 570 ஆக இருந்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 263 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. நான்கு பேர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 212 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
வாராந்திர கிருமித்தொற்று பரவல் விகிதம் 1.1லிருந்து 1.49க்கு உயர்ந்தது.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,225,024 என்றும் 1,356 பேர் தொற்றால் மடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.