இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பின் முக்கிய காட்சி அங்கத்தை பழுத்த திரையரங்க அனுபவசாலியான ஏட்ரியன் பாங் இயக்குகிறார்.
கடந்த இரண்டு ஆண்டு கொவிட்-19 தொற்றுக்காலத்தை சிங்கப்பூர் கடந்து வந்த பாதையையும் பொதுச் சுகாதார நெருக்க டியிலிருந்து மீண்டு வந்ததையும் கொண்டாடும் வகையில் இந்த அங்கம் இடம்பெறும்.
பாங்ெடமோனியம் எனும் உள்ளூர் நிறுவனத்தின் இணை நிறுவனரான 56 வயது பாங், 'த ஸ்டோரி ஆஃப் அஸ்' அங்கத்தை இயக்குகிறார்.
மரினா பே மிதக்கும் மேடையில் 25,000 முதல் 26,000 வரையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தக் காட்சி நேரடியாக அரங்கேறு கிறது. இதே காட்சி மில்லியன் கணக்கானவர்களுக்கு தொலைக்காட்சி வழியாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக 2,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதற்காக ஒத்திகை பார்த்து வருகின்றனர்.
ஒப்பனைக் கலைஞர்கள், பார்வையாளர்களை ஊக்குவிப்பது உட்பட 1,300க்கும் மேற்பட்ட இளையர்களும் இதில் பங்கேற்கின்றனர். தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில் இவ்வாண்டு ஆக அதிக இளையர்கள் பங்கேற்கின்றனர்.
முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பின் முக்கிய காட்சி அங்கத்தை இயக்கும் திரு பாங், கடந்த இரண்டு ஆண்டுகளின் சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதே இவ்வாண்டின் சவால்மிக்க கொண்டாட்டமாகும் என குறிப்பிட்டார்.