தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கமான தொடக்கப் பள்ளி ஐந்து மாணவர்களுக்கான தேசிய கல்வி நிகழ்ச்சி மூவாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரங்கேறியுள்ளது.
மரீனா பே மிதக்கும் மேடையில் சனிக்கிழமையன்று (2 ஜூலை) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 4.30 மணிக்கே பல மாணவர்கள் திரளத் தொடங்கினர்.
'எஃப்-16' ரக விமான சாகசங்கள், சிங்கப்பூர் ஆயுதப் படையின் படைப்புகள் உள்ளிட்ட அங்கங்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.