முப்பது சிறிய நடுத்தர நாடுகள் கொண்ட குழு, ஐக்கிய நாட்டு அமைப்பைச் சுற்றி இயங்கும் அனைத்துத் தரப்புகளையும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு முறைக்கு தங்கள் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாட்டு அமைப்பின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமநிலையான இறையாண்மை, கருத்துவேறுபாடுகளை அமைதியாகத் தீர்த்துக் கொள்ளுதல் ஆகிய கோட்பாடுகளை அந்த நாடுகள் வலியுறுத்தின.
மீள்திறன்மிக்க விநியோகச் சங்கிலிகளும் திறந்த, நியாயமான வர்த்தக கட்டமைப்பு ஆகியவற்றின் தேவையை அந்த நாடுகள் வலியுறுத்தின.
உலகளாவிய ஆளுமைக் குழு என்ற பெயர்கொண்ட அந்த நாடுகள் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இவற்றைக் குறிப்பிட்டன.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாட்டு அமைப்பின் 77வது பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அக்குழுவின் 15வது அமைச்சர்நிலைக் கூட்டம் இடம்பெற்றது.
புருணை, மலேசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், நியூசிலாந்து, குவைத், லக்சம்பெர்க், ருவாண்டா, உள்ளிட்ட நாடுகளும் குழுவில் உள்ளன.