கூடுதலான வெளிநாட்டு ஊழியரைப் பணியமர்த்த பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு ஜூன் மாதம் அறிவித்திருந்தது.

அதன் பிறகு, அத்தகைய ஆறு நிறுவனங்களுக்கு அதன் தொடர்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பேருந்துச் சேவைக்கு நிறுவனங்கள் எந்த அளவு பங்களிக்கின்றன, உள்ளூர் ஓட்டுநர்களைப் பணியமர்த்துவதில் அவை எத்தகைய கடப்பாட்டைக் கொண்டுள்ளன என்ற அம்சங்களின் அடிப்படையில் அவை மதிப்பீடு செய்யப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள், கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் குறைந்தது இரண்டு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் ஓட்டுநர் பணிக்கு அமர்த்துவதன் தொடர்பில் அவை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.

கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் அனுமதி வழங்கப்பட்ட ஆறு நிறுவனங்களின் பெயர்களை அது வெளியிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!