தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் ‘கேன்டீன் 9’ல், பசைப்பொறிகளில் சிக்கியிருந்த எலிகளைக் காட்டும் இரண்டு காணொளிகளை ‘ஜன்னலி’ என்பவர் மார்ச் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார்.
ஒரு பொறியில் குறைந்தது ஐந்து எலிகள் சிக்கியிருந்தன. விடுபட இரண்டு எலிகள் போராடிக்கொண்டிருந்தன.
இதுகுறித்து ஜன்னலி, “என்டியு கேன்டீன் 9ல் சுகாதாரமற்ற நடைமுறைகள் இருப்பதை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். சமையலறை மேசைகளின் மீது வைக்கப்பட்ட உணவு எச்சங்களில் பெருச்சாளிகள் இருக்கின்றன.
“பல்கலைக்கழகத்தின் மற்ற உணவகங்களில் ஏற்கெனவே நச்சுணவு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதனால், கேன்டீன் 9ன் தற்போதைய நிலைமையை நீங்கள் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஸ்டோம்ப் தளத்தின்வழி ஜன்னலி கோரியிருந்தார்.
எலிகளின் தொல்லை நாளுக்கு நாள் ‘கேன்டீன் 9’ல் மோசமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.