லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கானுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கட்கிழமை இரவு பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியும் பெங்களூரு அணியும் மோதின.
பரபரப்பாகச் சென்ற ஆட்டத்தின் கடைசி பந்தில் ஓர் ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது பந்தடிப்பாளராக இருந்த ஆவேஷ் கான் பந்தை அடிக்காமலேயே ‘பை’ (bye) மூலம் ஓர் ஓட்டம் எடுத்து லக்னோ அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
அந்த உற்சாகத்தில் ஆவேஷ் கான் தமது தலைகக்வசத்தை ஆவேசமாக தரையில் வீசியெறிந்து வெற்றியைக் கொண்டாடினார்.
ஐபிஎல் ஒழுங்கு விதிமுறைப்படி அந்தக் கொண்டாட்டம் வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, ஆவேஷ் கான்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
என்ன தண்டனை தரவேண்டும் என்பது குறித்துக் களத்தில் இருந்த நடுவர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.
தமது தவற்றை ஆவேஷ் கான் ஒப்புக்கொண்டார்.