பேருந்து தாக்கு-தலில் ஈடுபட்ட காற்பந்து ரசிகர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என்று வெஸ்ட் ஹேம் காற்பந்து குழுத் தெரிவித்துள்ளது. வெஸ்ட் ஹேம் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் விளையாட சென்று கொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடெட் குழுவினரது பேருந்தின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின்போது, பேருந் தின் மீது போத்தல்கள் வீசப்பட்ட தோடு அதன் சன்னல் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக ஆட்டம் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. ஆட்டத்தின்போதும் மேன்யூ கோல்காப்பாளர் டேவிட் ட கியா மீது போத்தல்கள் வீசப்பட்டன.
"போலியன் மைதானத்திற்கு வெளியே கூடியிருந்த வெஸ்ட் ஹேம் ரசிகர்களின் செயல் முறையானது அல்ல," என்று அக்குழு வின் அறிக்கை தெரிவித்தது. இதுதொடர்பாக, போலிசின் உதவியோடு அடையாளம் காணப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டவர் களுக்கு காற்பந்தாட்டத்தைக் காண ஆயுட்கால தடைவிதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், வெஸ்ட் ஹேமின் துணைத் தலைவர் டேவிட் சுலவன், பேருந்ததைச் சுற்றி மக் கள் இருந்தார்களே தவிர பேருந் தின் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் வந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது போலிசார் புகையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ்