கார்

சேலம்: கூகல் வரைபடத்தைப் பார்த்து கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று திங்கள்கிழமை காலை சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கனககிரி பகுதி அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.
பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நேற்று முன்தினம் மட்டும் (23.3.2024) இரண்டு இடங்களில் நிகழ்ந்துள்ளது.
ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட 49 வயது சிங்கப்பூரர், சிகிச்சை பலனின்றி ஐந்து நாள்களுக்குப்பின் உயிரிழந்தார்.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.