ஒரே நாளில் விரைவுச்சாலையில் இரண்டு வாகனங்களில் தீ

விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நேற்று முன்தினம் மட்டும் (23.3.2024) இரண்டு இடங்களில் நிகழ்ந்துள்ளது.

முதல் சம்பவம் தீவு விரைவுச்சாலையில் பிற்பகல் வாகனம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இது குறித்த காணொளி ‘ரோடு எஸ்ஜி’ தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. நீர்ப் பீய்ச்சி அடித்து அந்தத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பின்னர் அந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் கனரக வாகனம் ஒன்று தீப்பற்றிக்கொண்டதைக் காட்டும் காணொளி ‘ரோடு எஸ்ஜி’ ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீச் சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தீப்பிடிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீச்சம்பவங்களுக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!