கவனத்தை ஈர்த்த மதுரை எம்.பி.யின் ‘தமிழ்’ வேட்டி

கீழடி அருங்காட்சியக திறப்பு விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அணிந்திருந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கரை வேட்டி, பலரது கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதன் தொடர்பில் திரு வெங்கடேசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “கீழடியை அகழாய்வுத்தளமென முதலில் கண்டறிந்த தமிழாசிரியர் பாலசுப்பிரமணியம், தொல்லியலாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நடந்த விழாவில் கீழடி பணிகளுக்காக அவர்கள் மூவரும் சிறப்பிக்கப்பட்டனர்.

‘காவல் கோட்டம்’, ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ உள்ளிட்ட புகழ்பெற்ற புதினங்களை திரு வெங்கடேசன் எழுதியுள்ளார். தமது முதல் நூலான காவல் கோட்டத்திற்கு இவர் சாகித்திய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

'வேள்பாரி' நாவலை இயக்குநர் சங்கர் திரைப்படமாக எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!