திருச்செங்கோடு: தனது பெயரில் வீட்டை எழுதித் தரும்படி மகன் தொந்தரவு செய்து வந்தும், அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்த பங்கஜம் என்ற தாய் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள தோக்கவாடி விநாயகபுரத்தைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது மூத்த மகன் பிரகாஷ். தாய் பெயரில் இருந்த வீட்டை தனது பெயரில் எழுதித் தருமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.
“எனக்குப் பிறகு இந்த வீடு உன் குழந்தைகளுக்குத்தான் எழுதிவைப்பேன்,” என பங்கஜம் கூறியும் அதையெல்லாம் காதில் வாங்காத பிரகாஷ், வீட்டை தன் பெயருக்கு எழுதித் தராத தாயை அடித்துக்கொன்று, தீயிட்டு எரித்து விட்டு தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலிசார் தேடி வருகின்றனர்.
சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மனைவி முத்துலட்சுமியையும் மிரட்டியுள்ளார். தாயின் சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். அரண்டு போயிருந்த முத்துலட்சுமி இந்த விவகாரத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.