சென்னை சென்ட்ரல் மூா்மாா்க்கெட் வளாகத்தின் புறநகா் ரயில் நிலையக் கட்டடத்தில் 80 அடி உயரத்தில் இந்தியத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ஓவியம் ரயில்வே ஊழியா்கள், பயணிகள் உள்பட அனைவரையும் கவா்ந்து வருகிறது.
மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழாவை நினைவு கூரும் விதமாக, நேற்று முன்தினம் இந்த அழகிய ஓவியம் பொதுமக்களின் பாா்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், “இந்திய ரயில்வே யுடன் மகாத்மா காந்தியடிகள் கொண்டிருந்த தொடா்பு மிகவும் நெருக்கமானது.
“காந்தியடிகள் மேற்கொண்ட ரயில் பயண நிகழ்வு ஒன்றை சுவா் ஓவியமாகத் தீட்ட சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டது.
“அதன்படி, சென்னை மூா்மாா்க்கெட் வளாகக் கட்டடத்தின் கிழக்குப் பகுதி சுவரில் இந்த 80 அடி உயரமுள்ள காந்தியின் அழகிய பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது. இந்த சுவா் ஓவியம் பெரிய வகை பாரந்தூக்கியின் உதவியோடு எட்டு நாட்களுக்குள் வரைந்து முடிக்கப்பட்டது. இந்த ஓவியத்தை முதன்முதலில் உருவாக்கியவா் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ஓவியா் சங்கரலிங்கம் ஆவாா்,” என்றனா்.