சேலம்: ஆபாசப் பேச்சுடன் கூடிய இணைய விளையாட்டு வாயிலாக கோடீஸ்வரர்களாக வலம் வந்த மதன், கார்த்திகா தம்பதி, வருமான வரித்துறை அதிகாரிகளையும் ஏமாற்றியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிய தம்பதிகள் சொந்தமாக இரண்டு 'ஆடி' கார், சொகுசு பங்களாக்களில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இப்போதும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி வரை இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தங்களது வருமானத்துக்கு ஏற்ற வரியைச் செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளதை அடுத்து, மதன், கிருத்திகாவின் சொத்து மதிப்பை வருமான வரித் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கத் துவங்கி உள்ளனர்.இதனால் அவர்களது எதிர்காலம் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் மதன், 29. இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும் தடை செய்யப்பட்ட 'பப்ஜி' எனும் இணைய விளை யாட்டை ஆபாசப் பேச்சுடன் தங்க ளின் யூடியூப் ஒளிவழியில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
இதன் வாயிலாக பல கோடி ரூபாயைக் குவித்தனர். ஏழைகளுக்கு உதவி செய்வதாக பண மோசடியிலும் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து, 200க்கும் மேற்பட்டோர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.
மதன், கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கிருத்திகாவுடன் எட்டு மாத குழந்தையும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.