வருமான வரி அதிகாரிகளையும் ஏமாற்றிய மோசடி தம்பதி

வருமான வரி அதிகாரிகளையும் ஏமாற்றிய மோசடி தம்பதி

1 mins read
ab95d306-66c8-461b-8e55-98d578397f65
-

சேலம்: ஆபா­சப் பேச்­சு­டன் கூடிய இணைய விளை­யாட்டு வாயி­லாக கோடீஸ்­வ­ரர்­க­ளாக வலம் வந்த மதன், கார்த்­திகா தம்­பதி, வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­க­ளை­யும் ஏமாற்­றி­யுள்ள விவ­ரம் தெரிய வந்­துள்­ளது.

கோடிக்­க­ணக்­கில் வரு­மா­னம் ஈட்­டிய தம்­ப­தி­கள் சொந்­த­மாக இரண்டு 'ஆடி' கார், சொகுசு பங்­க­ளாக்­களில் உல்­லாச வாழ்க்கை வாழ்ந்­துள்­ள­னர். இப்­போ­தும் அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் ரூ.4 கோடி வரை இருப்பு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும், தங்­க­ளது வரு­மா­னத்­துக்கு ஏற்ற வரி­யைச் செலுத்­தா­மல் ஏமாற்றியது தெரி­ய­வந்­துள்­ளதை அடுத்து, மதன், கிருத்­தி­கா­வின் சொத்து மதிப்பை வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள் கணக்­கெ­டுக்­கத் துவங்கி உள்­ள­னர்.இதனால் அவர்களது எதிர்காலம் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

சேலத்­தைச் சேர்ந்­த­வர் மதன், 29. இவ­ரது மனைவி கிருத்­திகா, 25. இரு­வ­ரும் தடை செய்­யப்­பட்ட 'பப்ஜி' எனும் இணைய விளை யாட்டை ஆபா­சப் பேச்­சு­டன் தங்க ளின் யூடி­யூப் ஒளி­வ­ழி­யில் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­த­னர்.

இதன் வாயிலாக பல கோடி ரூபாயைக் குவித்தனர். ஏழை­க­ளுக்கு உதவி செய்­வ­தாக பண மோச­டி­யி­லும் ஈடு­பட்டு உள்­ள­னர். இது­கு­றித்து, 200க்கும் மேற்­பட்­டோர் போலி­சில் புகார் அளித்­துள்­ள­னர்.

மதன், கிருத்திகாவை கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர். கிருத்­தி­கா­வு­டன் எட்டு மாத குழந்­தை­யும் சிறையில் இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.