கைபேசியில் வைஃபை இணையத் தொடர்பு சரியான முறையில் கிடைக்காததால், கல்வி கற்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்கள் தங்கள் கிராமத்தில் உயரமாக வளர்ந்துள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து இணையக் கல்வியைப் பயின்று வருகின்றனர்.
இதுபோல் மரத்தில் ஏறி படிக்கும்போது, கீேழ விழுந்து கை கால் முறிந்தால் என்னாவது என மாணவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உயிரைப் பணயம் வைத்து தங்களது பிள்ளைகள் படிப்பைத் தொடர்ந்து வருவதாகவும் பெற்றோர் சொல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை என்ற பகுதிகள் உள்ளன.
அங்கு கைபேசி சமிஞ்கை கோபுரங்கள் இல்லாததால், கைபேசியில் பேசுவதற்கே சரியான சமிக்ஞை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் 20க்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரி, பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால் இணையம் வாயிலாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர்.
பாடம் சம்பந்தப்பட்ட காெணாளி, இணைய வகுப்புகளைக் கவனிக்க வேண்டுமெனில் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் கைபேசி கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.