சென்னை: தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இந்தச் சூழலில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும், அதிலும் குறிப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
"காவிரி கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த ெவள்ளநீர் காரணமாக மின்விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நீர் வடிந்தபிறகே மின் விநியோகம் சீராக வழங்கமுடியும்," என செந்தில் பாலாஜி கூறினார்.